Saturday, July 7, 2012

Naan Ee (Tamil movie நான் ஈ)


Indian heroes had taken lots of avatars to take revenge for their love. The latest of their avatar is House Fly..thats Naan Ee.

Though it will sound stupid to hear that the Hero is taking revenge in the form of House Fly, its the way they had presented makes the movie enjoyable. If you are ready not to Question how the Fly can interact with the Heroine, how can it do this and that, then you will definitely enjoy the whole riot.

Top honors go to the ace director Rajamouli & his CG team. His treatment to the subject and the CG works are absolutely fantastic. Though it is a small duration, Naani's original HUMAN character works well & this no-nonsense act can fetch him lots of opportunities as Guy-next-door Hero.

Samantha is cool and as usual mesmerizes. The surprise package is the villian Sudeep. He has got a wonderful opportunity to fill the show with Emotions & he has done perfect. This Kannada Star reminds of the Legendery actor Raguvaran.

Leading Comedian's small part is a dynamite package.

Though it really looks stupid initially to see the Fly to interact with Lead characters and take revenge, slowly it fades away.

This movie will work really well for all children and for adults, if they are ready to throw away their thinking hat, then they will also really enjoy for sure.

Monday, July 18, 2011

தெய்வத்திருமகள்



நிலாவின் நடிப்பு. . . ஒவ்வொரு நொடியும் அட்டகாசம்! என்று சொல்ல இயலாமல் தடுமாறும் போதும், தன் தாயைப் பற்றி தந்தையிடம் கேட்கும் போதும், நிலவுடன் பேசும் போதும் நம்மை மெய் மறக்கச் செய்பவள், கோர்ட் காட்சியில் விக்ரமுடன் இணைந்து நம்மை நிலைகுலையச் செய்கிறாள். விருதுகள் வண்டி கட்டி வருவது நிச்சயம்.

கிருஷ்ணாவாக விக்ரம். ஆரம்ப காட்சிகள் நம் பொறுமையை சோதித்தாலும், சிறிது நேரத்திலேயே சிறை பிடிக்கிறார். நிலாவிற்கு கதை சொல்வது, தண்ணீர் குழாயை அடைப்பது, சிக்னலை கவனிப்பது, மருந்து வாங்குவது போன்ற காட்சிகளில் உயர்த்திக் காட்டப்படும் கிருஷ்ணாவின் மனநிலை, அவருடைய மாமனாரைத் தவிர நம் அனைவருக்கும் புரிகிறது.

அழகான அனுஷ்கா.... அவருக்கே தெரியும், தமிழில் இதுதான் அவரது பெஸ்ட் என்று. கிருஷ்ணா/நிலா-விற்காக போராடும் போது நம் பாராட்டைப் பெறும் அவர், 'விழிகளில்...’ பாடலில் நம் கண்களையும், இதயத்தையும் திருடிச் செல்கிறார்.

சிறிது கனம் பொருந்திய வேடத்தில் சந்தாணம். இருந்தாலும் கிடைக்கும் போதெல்லாம் வெடியாய் சிரிக்க வைக்கிறார். கதையோடு ஒன்றிய காமெடி, பலம்.

'மைனா' அமலா பால். மைனா - அளவிற்கு வேலை இல்லை என்றாலும், அமைதியாய், அழகாய் வந்து செல்கிறார். குறிப்பாய், ‘Correspondent'-ஆக படபடக்கிறார்.

இவர்கள் தவிர, நாசர், மகேந்திரா உட்பட அனைவரும் தங்கள் வேலையை சரிவர செய்திருக்கிறார்கள்.

ஒரு அழகான கதையை, அனைவரும் ரசிக்கும் விதத்தில் விருந்தாய் தந்திருக்கிறார் இயக்குனர் விஜய். அவரது பங்களிப்பை படம் பார்த்துத் தான் உணர வேண்டும்.அபாரம்.

இந்தப் படத்தின் பெறும் பலம் இசை. G.V.பிரகாஷ் பிண்ணனியில் ப்ரமாதப்படுத்திவிட்டார்.காதின் வழியாய் உள்ளத்தில் நுழைந்து, கண்களில் நீரைக் கரைய விடுகிறார்.

பாஸ்கரும், அவரின் கெட்டப்பும், அவருடைய கதாபாத்திர உருவாக்கமும்... ஏமாற்றம்.

'விழிகளில் ஒரு வானவில்...’ பாடல் வரிகள் அருமை என்றால், அதன்  வண்ணம் அபாரம்; அனுஷ்கா ஜொலிக்கிறார். அனுஷ்காவின் எண்ணங்களை கோடிட்டுக் காட்டி, அந்த எண்ணங்களின் முடிவை நம்மிடமே விட்டு விட்டது கவிதை.

இப்படத்தின் சுருக்கத்தை ஒற்றை வரி இசையில் கொடுத்திருப்பது தான் ‘Life is Beautiful‘ன் சிறப்பு. அதிலும் பிற்பகுதியில் வரும் ‘வயலின்’ இசை, நம் இதயத்துடிப்பு!!!

சிறந்த படங்களைப் பார்த்தவுடன், அத்தகைய எண்ண ஓட்டம் கொண்ட என் நண்பர்களை தொலைபேசியில் அழைத்து, படம் பார்க்கச் சொல்வது என் வழக்கம். இந்தப் படத்தைப் பார்க்குமாறு பலருக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால், படம் முடிந்தவுடன் நண்பன் ‘ஜோ’வை அழைத்த போது, என்னால் பேச இயலவில்லை. வார்த்தைகள் தத்தளித்தன.

‘படம் போய் பார்’ என்று மட்டுமே கூற முடிந்தது. அந்த நொடி கூறிற்று ‘தந்தை-மகள் உறவைக் கூறிய மிகச்சிறந்த படமென்று’!  'அன்பை உரக்கச் சொல்லிய மிகச்சிறந்த படமென்று’!!

இத்திரைப் படத்தின் வெற்றி விழாவிற்கும், விருது விழாக்களுக்கும் வாழ்த்துக்கள்..!

~ ப்ரியமுடன், 
பாலா

Sunday, January 30, 2011

பிரிவு



என்னாளில் இப்பிரிவு வந்ததென்று யான் அறியெனே...!


இப்பாழும் உலகில், அந்நாளை மட்டும்

முன்பே அறியும் பாக்கியம் பெற்றிருந்தால்

அதற்கு முன்னாலே அழித்திருப்பேன் - அந்நாளை..!


அதை விடுத்து, இப்போது எட்ட நின்று,

எட்ட முடியா தூரத்தில் விட்டு,

கொட்ட முடியா துயரத்தில்

துடித்துக் கொண்டிருக்க மாட்டேன்!
 
 
~ ப்ரியமுடன்,

பாலா

Saturday, November 27, 2010

திருமணம்



வயது ஏற ஏற, சோம்பேறித்தனம் ஏறிக்கொண்டே போகின்றது.
வெட்டியாக இருந்தாலும் ஏதேனும் எழுதத் தோன்றுவதில்லை.
அதனால் தான் ஒவ்வொரு பதிவிற்கும் இடையே நீண்ட இடைவெளி.


சென்ற வாரம் என் தோழியின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால், விடுப்பு எடுக்காமல் சமாளித்தாக வேண்டிய கட்டாயம்.

எனவே அலுவலகம் சென்று, பாதி வேலை முடித்து, மீதியை சரிகட்ட ஆள் பிடித்து,அடித்து பிடித்து, விமானம் பிடிக்க ஓடினேன்.

இந்தியாவில் இருந்தால் முடிந்தளவு நண்பர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.


டில்லி, பெங்களூரூ, சென்னை யை சேர்ந்த மூன்று நண்பர்கள்
நாங்கள் கோவையில் சந்தித்தோம்.

அங்கிருந்து உடுமலைக்கு காரில் செல்வதென ஏற்பாடு. கோவையில் இரவு உணவு முடித்து விட்டுக் கிளம்பினோம்.

வாங்கண்ணா, போங்கண்ணா என கோவைத் தமிழில் தான் என்ன சுகம்.

வழி முழுக்க சொந்தக் கதை, சோகக் கதை (வேறென்ன, அவரவர் பணிச் சுமைகள் தான்), சினிமா, அரசியல் என அடி கிளப்பினோம்.மிக இனிமையான பயணம்.


மந்தை ஆடுகள் தான் பிரிந்து சேரும் போது பேச முடிவதில்லை. நாங்கள் அப்படியள்ள.
சில நண்பர்களுடன் சேர்ந்தால் இரவு நீளாதா எனும்படி பேசிக்கொண்டே இருப்போம்.

வழக்கம் போல் மண்டபத்தில் தோழியை கிண்டலடித்து, சில பல திட்டுகளை வாங்கிக் கொண்டு உறங்கச் சென்றோம்.

என் நண்பர்கள் அதிகாலையில் எழுந்து, முகூர்த்தத்திற்கு முன்னரே சென்ற அதிசயம் நடந்தது. அதற்கான அவசியமும் இருந்தது. ஏனெனில் இவ்வளவு தூரம் வந்து முகூர்த்தத்திற்கு தாமதமாக வருவதில் அர்த்தம் இருக்காது;  தோழியிடம் திட்டு வாங்க முடியாது;  திரும்பவும் அடித்து பிடித்து மூவரும் விமானம் பிடித்து டில்லி, பெங்களூரூ, சென்னை செல்ல வேண்டும் - அலுவலக, குடும்ப நிர்பந்தங்கள்.

முகூர்த்தத்திற்கு முன்னரே சென்று, திருமணத்தைக் கண்ணாறக் கண்டு, வயிறாற உண்டு,
திரும்பவும் கோவை வந்து ஆளுக்கொரு திசையில் பறந்தோம்.


அட ஆயிரம் சொல்லுங்கள், நண்பர்களின் திருமணத்தில் கலந்து கொள்வதில் உள்ள இன்பம் வேறெதிலும் இருப்பதில்லை; அங்கு அனைத்து நண்பர்களும் வந்தால் கொண்டாட்டங்கள் அளவில்லை.

இந்த முறை எதிர்பார்த்த நண்பர்கள் பலர் வராததால் கொண்டாட்டங்கள் குறைவு என்றாலும்,  தோழியின் திருமணத்தில் கலந்து கொண்ட மனநிறைவு முழுமையாய் இருந்தது - ஏனெனில்

சில ஆண்டுகள் முன் மற்றொரு தோழியின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத போது ஏற்பட்ட மனச்சுமை இன்னும் ஓர் ஓரத்தில் இருக்கிறது.


என்னைப் பொறுத்தவரை, நண்பர்களின் சுற்றுலாக்கள், இதர விழாக்களில் கலந்து கொள்ள முடியாதது காயம் - உள்ளாறும்;

நண்பர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாதது வடு - ஆறாது!


உள்ளூரில் வேலை செய்த நம் முந்தைய தலைமுறை குறைவாய் வருவாய் ஈட்டினாலும் பற்பல நண்பர், உறவினர்களை பெருக்கிக் கொண்டே சென்றது;

உலக மயமான நமது தலைமுறை வருவாயை பெருக்கிக் கொண்டே சென்றாலும்,    இருக்கும் நண்பர், உறவினர்களை ஈட்டியால் குத்த வேண்டிய கட்டாயத்தில் செல்கின்றது, தனக்குத் தெரியாமலேயே !!


~ ப்ரியமுடன்,

பாலா

Sunday, September 26, 2010

எண்ணங்கள்

                                           



அலுவலகம், அலுவல்கள்,


அலுவலக சினேகங்கள்,

மற்ற நண்பர்கள்,

குடும்பம்,உறவினர்,

சமூகம், அரசியல்,

விளையாட்டு,பொழுதுபோக்கு,

தூக்கம். . . . .

என இவற்றையெல்லாம் தாண்டி

என்னைப் பற்றி எண்ண

சில மணித்துளிகளே மிச்சமுள்ளன.



அவ்வாறு என்னைப் பற்றி

எண்ணும்போதெல்லாம்

உன்னைப் பற்றிய நினைவுகளை

விலக்க முடிவதில்லை.



அப்போது, உன்னைப் பற்றிய

என் மனதின் கேள்விகளுக்கு

என்னிடம் பதில் இல்லாததால்...



இப்போதெல்லாம் நான்

என்னைப் பற்றி

எண்ணுவதில்லை.


-ப்ரியமுடன்,

பாலா

Saturday, August 14, 2010

அடப்போங்கப்பா - 2 உள்நாட்டு தீவிரவாதம்






”டமால். .. ... ”




கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்க

காத்திருந்த காதலன்,


காதலுடன் கண்களால் தேனிலவு

கொண்டாடிய புதுமணத் தம்பதியர்,


அவசர சிகிச்சைக்காக அன்னையின்

அரவணைப்பில் சென்ற பாலகன்,


ஆச்சரியம் தர ஒரு மாத விடுமுறையில்

ஆடம்பரமாய் சென்ற நகரத்து ஊழியன்,


முதல் கூடைப் பூவையாவது முழுவதுமாய்

விற்றுவிட முயன்ற மூதாட்டி,


மூத்த மகனின் வீட்டிலிருந்து அடுத்த மாத உணவிற்கு

இளைய மகன் வீட்டிற்கு சென்ற பெற்றோர்,



- என அனைவரின் கனவுகளும், வாழ்க்கையும்

முடிந்து போனது,



அவர்களுக்கு இருந்த, இல்லாத உறவினர்,

நண்பர் நிம்மதியும் முற்றும் பெற்றது,



நீங்கள் ஒற்றைத் தண்டவாளக் கட்டையை உருவியதால்!!





போராளி என்றோ, நக்சல் என்றோ,

மாற்றுக் குழு என்றோ, மாவோயிஸ்ட் என்றோ


பலபேர் பலவாறு உங்களை அழைக்கலாம்,



முன்னாள் நடிகையோ, மூத்த பத்திரிக்கையாளரோ

முழுவதுமாய் உங்களை ஆதரிக்கலாம்,



மாநில அரசுகள் தங்களைக் காப்பாற்ற

மத்திய அரசைச் சாடலாம்,



மத்திய அமைச்சரவை கூடி

அதிரடி நடவடிக்கை வேண்டும் என்றும்,

மண்ணின் மைந்தர்கள் மீது

ராணுவ நடவடிக்கை கூடாது என்றும்,

விவாதித்து முடிவு ஏதும்

எடுக்காமல் முடிந்தும் போகலாம்.




ஆனால் ஒன்று. . . .



கேட்க நாதியற்ற சராசரி இந்தியனையோ,

கடைநிலையில் உள்ள ராணுவ வீரனையோ,


நீங்கள் குறி வைக்கும் வரை

உங்களுக்கு கவலையில்லை.



தப்பித் தவறி சினிமா நட்சத்திரத்தையோ

மாநில மத்திய அரசியல்வாதியையோ

தீண்டி விடாதீர்கள். . . .



பின்னர் மாநில மத்திய

காவல்துறைகள் மட்டுமன்றி

சிறப்பு அதிரடிப் படைகளும்

உள்நாட்டு வெளிநாட்டு ராணுவமும்

உங்களைத் தேடக் கூடும்...


சர்வதேசத் தீவிரவாதியென

அறிவிக்கக் கூடும்...


உங்கள் தாய்தந்தையரையும்,

உற்றார் உறவினரையும்,

வெளிநாடு செல்லவோ

உள்நாடு திரும்பவோ

அனுமதி மறுக்கக் கூடும்...



ஆகவே ஆன்றோரே சான்றோரே....


மறந்து விடாதீர். .

மறந்தும் இருந்து விடாதீர். .



தப்பித் தவறி சினிமா நட்சத்திரத்தையோ

மாநில மத்திய அரசியல்வாதியையோ

தீண்டி விடாதீர்கள். . . . !!



அடப்போங்கப்பா நீங்களும்

உங்கள் கோட்பாடுகளும்.. . .!!!!

 
 
 
~ ப்ரியமுடன்,


பாலா

Sunday, May 30, 2010

அடப்போங்கப்பா - 1 இந்தியக்குடிமகன்


பத்து ரூபாய்க்கு ‘பரவாயில்லை’ ரக அரிசி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், இன்று ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி 'பிரமாதமான’ சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்;

வரைமுறை இல்லாமல் தரப்படும் ‘ஓசி’ டிவி வாங்கி, அப்பொழுதே விற்று, அந்தக் காசில் அடுத்த மாத வடகையை அட்ஜஸ்ட் செய்கிறான்;

அட, கிடைப்பதே ஒரு நாள் விடுமுறை, அன்றும் வரிசையில் நின்று அப்படி ஓட்டுப் போட்டுத்தான் ஆகவேண்டுமா என தூங்கிக் கழிக்கிறான்;

வீட்டின் குடைச்சல், கடன் தொல்லை, அலுவலகச் சுமை என அனைத்தையும் ஒரு ‘குவாட்டரில்’அப்போதைக்கு கரைத்து விடுகிறான்;

அதே ‘அரசு’ மதுபானக்கடையில் தன் ’பட்டதாரி’ தம்பிக்கு அரசு ‘வேலை’ போட்டு கொடுத்ததும், ‘சந்தோசத்தில்’ இன்னொரு ரவுண்டு விடுகிறான்;

பேருந்து, மின்சாரம் என எங்கு அதிகக் கட்டணம் கேட்டாலும், விதியே என கேள்வி கேட்காமல் கொடுத்து விடுகிறான்;



ஆக, ’நிலையான அரசு’, ’போக்குவரத்துத் துறையில் லாபம்’, ’சாராயத் துறையில் லாபம்’, ‘மின்சாரத் துறையில் லாபம்’ எனப் பல பெருமைகளை வழங்கி, தான் அழிந்து கொண்டிருக்கிறான்;

அவன் தான் ‘சாதாரண குடிமகன்’ - ஓ, மன்னியுங்கள்; ‘சதா’-’ரண’-’குடி’மகன் !


அடப்போங்கப்பா.... நீங்களும் உங்கள் அரசாங்கமும்!!


~ ப்ரியமுடன்,
பாலா