என் ஆருயிர்த் தோழி ஒருத்தி, அழகாய் வளர்த்தாள் தன் விரல் நகத்தை;
அது அவளுக்கும், அவள் அதற்குமென அழகு சேர்த்துக் கொண்டனர்;
சட்டென்று ஒரு நாள், பட்டென்று அதனை வெட்டி எறிந்துவிட்டாள்.
காரணம் கேட்டேன்; ’பிடிக்கவில்லை’ என்றாள்.
மற்றொரு நாள், என் நட்பையும் அவ்வாறு வெட்டி எறிந்த போதுதான்
உணர்ந்தேன்
- அந்த நகம் எவ்வளவு துடித்திருக்குமென்று...!
-ப்ரியமுடன்,
பாலா
(கல்லூரிக் காலத்தில் எழுதியது)
Superb ... Guessing the person..
ReplyDeleteஅது நீங்கள் நினைத்தவராக இல்லாமலோ,
ReplyDeleteநீங்கள் நினைத்தவராக மட்டும் அல்லாமலோ இருக்கலாம்.
நல்லவேளை, இப்போதே சொன்னீர். . .
காதல் கவிதை ஏதேனும் எழுதும் போது
”Superb ... Guessing the person..“
என்று சொல்லாமல் இருந்தால் சரி!!